ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

எனது அம்மப்பா

இன்று தைப்பூசம். எனது அம்மப்பாவின் திதியும் இந்நாளிலேயே வருகிறது. இன்று அவரின் முப்பதாவது வருட நினைவுடன் கடந்துபோகிறேன். அவர் ஒரு பூரண வாழ்க்கையை வாழ்ந்தார் என்று நினைக்கிறேன். அவர் சாதாரணமானவர்களில் இருந்து சற்று வித்தியாசமானவர். தனது முதிய வயதிலும் ஆளளவு உயர பட்டங்களை கட்டி வயல்வெளியில் எல்லோருடனும் சேர்ந்திருந்து ஏற்றுவார். அந்த பட்டங்களின் விண் சத்தம் ஆறு/ ஏழு மைல் தூரத்திற்கு கேட்கும். மூன்று மொழியையும் ஓரளவு கற்றிருந்தவர் ஆனாலும் அரசியலில் அவருக்கு ஈடுபாடு இருந்ததில்லை, தமிழர் கட்சிக்கு வாக்கு போடுவதுடன் முடிந்துவிடும். அவர் சிவதீட்சை கேட்டவர், வீட்டில் சமய கலாசாரங்கள் இருக்கும் ஆனாலும் கோயிலுக்கு போவது குறைவு. அவரிடம் ஒரு ரலி சைக்கிள் இருந்தது, அது எப்போதும் கழுவி பூட்டி நல்லநிலையில் இருக்கும். பழமரங்களில் ஒட்டுக்கட்டுவதிலும் ஈடுபாடு இருந்தது. இறுதிநொடிவரை நல்ல ஞாபகசக்தியுடனும் , ஓரளவு நடமாடக்கூடியவராகவும் இருந்தார். இயற்கையை நேசித்துவாழ்ந்தவர் ,அவரது மூன்று பேரர்கள் மாவீரர்களாய் வாழ்கிறார்கள்.