எழுத்தாளர், மாவீரர் மலரவன் ( காசிலிங்கம் விஜிந்தன்) அவர்கள் அமரர் முத்துக்குமாரு காசிப்பிள்ளை ( மரபுவழி அறங்காவலர், தலைவர் - நயினை நாகபூசணி அம்மன் ஆலயம்) அவர்களின் தந்தைவழி பூட்டன் அமரர் கா.பொன்னம்பலம் (பதிவுபெற்ற ஒப்பந்ததாரர் ) அவர்களின் தந்தைவழி பேரன், அமரர் பொ. காசிலிங்கம் ( ஆங்கிலம், ஆயுர்வேதம் ஆகிய இருமருத்துவங்களிலும் பதிவுபெற்ற மருத்துவர், மூத்த களமருத்துவர்) அவர்களின் இளையமகன்.
மலரவன் ஒரு ஈழத்து எழுத்தாளர். இவர் எழுத்தாளர், ஹோமியோபதி மருத்துவர் மலரன்னையின் இளைய மகன் மற்றும் மூத்த எழுத்தாளர், ஆசிரியர் கச்சாயில் இரத்தினத்தின் (இராசரத்தினம்) தாய்வழி பேரன்.அமரர் செல்வசிகாமணி இராசரத்தினம் ( மலையக பாடசாலை ஆசிரியை) அவர்களின் தாய்வழி பேரன்.
மலரவனது நூல்கள்
போர் உலா (நாவல்) - இலங்கை இலக்கிய பேரவையின் அகில இலங்கை ரீதியான இலக்கிய தேர்வில் (1993) முதல் பரிசு பெற்றது. இதுவரை ஐந்து பதிப்புகளை பெற்றுள்ளது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு பத்திரிகைகளில் தொடராக மீள்பிரசுரமாகியிருக்கிறது. (யாழ்) உதயன் ஞாயிறு சஞ்சிகையில் தொடராக மீள்பிரசுரமாகியதும் குறிப்பிடப்படவேண்டியது. "போர் உலா " தொடர் நாடகமாகவும் வானொலியில் ஒலிபரப்பப்பட்டுள்ளது. காட்டூன் வடிவிலும் பிரசுரமாகியுள்ளது. போர் உலாவின் ஆங்கில மொழி பெயர்ப்பும் war journey என்ற பெயரில் புத்தகமாக வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. war journey என்ற இந்நூல் Penguin என்ற இந்தியாவின் பிரபல வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.
என் கல்லறையில் தூவுங்கள் - சிறுகதைகள், கவிதைகளின் தொகுப்பு
மலரவனின் ஹைக்கூ கவிதைகள் - இலங்கையில் வெளியான நான்காவது ஹைக்கூ தொகுப்பு. "ஜீவநதி" யின் ஹைகூ சிறப்பிதழில் அனைத்து கவிதைகளும் மீள்பிரசுரமாகியிருக்கிறது.
புயல் பறவை (நாவல்) - வட கிழக்கு மாகாண சாகித்திய மண்டல பரிசு பெற்றது(2003). இரண்டாம் பதிப்பு விடியல் பதிப்பகத்தால் வெளியாகியிருக்கிறது.
பலவேகயா 2 ற்கு எதிரான சமரின் இராணுவரீதியிலான அழகியல் தொகுப்பே இவரின் இறுதியான பதிவாக இருக்கவேண்டும். இந்த ஆக்கம் தலைவர் பிரபாகரனுக்கு மிகப்பிடித்ததாக இருந்தபோதும் புலிகளின் இராணுவநலன்கருதி வெளியீடு ஆகியிருக்கவில்லை.