சனி, 10 அக்டோபர், 2015

மலரன்னையின் சிறுகதைகள்

மலரன்னையின் சிறுகதைகள் தொகுதியாய் வெளியாகியுள்ளது.




மலரன்னையின் எண்பதிற்கு  மேற்பட்ட  சிறுகதைகள் இலங்கையில் வெளியான பல்வேறு வெளியீடுகளில் வெளியாகியிருக்கிறது. சில சிறுகதைகள் சர்வதேச வெளியீடுகளில் மீள்பதிவும் செய்யப்பட்டுள்ளது.நாற்பதிற்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள் ஒலிபரப்பாகியுள்ளதும் , ஒரு தொடர் நாடகம் நாற்பத்தைந்து அங்கங்களுடன் ஒலிபரப்பானதும்  குறிப்பிடவேண்டியது. இவரது இருபத்தி நான்கு ஆக்கங்கள் இதுவரை பரிசுபெற்றிருக்கின்றன.இவரது பத்து ஆங்கிலக்கவிதைகள் HOTSPRING பத்திரிகையில்  பிரசுரமாகியிருக்கிறது. 
 இவர் ஒரு "ஹோமியோபதி" மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 28 ஜூன், 2015



புதன், 8 ஏப்ரல், 2015

மலரவனின் நாற்பத்திமூன்றாவது பிறந்ததினம்


எழுத்தாளரும்,மாவீரருமான மலரவனின் நாற்பத்திமூன்றாவது பிறந்ததினம் ( 08/04/2015)

கப்டன் மலரவன் ,தனித்துவமான எழுத்தாளன். அவனது "போர் உலா  " நாவல் தாயகத்தில் இரு தடவையும் புலத்தில் மூன்று தடவைகளும் பதிப்பாகியுள்ளது."போர் உலா  " நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு
war journey என்ற பெயரில் pen  queen  பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இவனது "புயல்பறவை" நாவலின் இரண்டாவது பதிப்பு அண்மையில் விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.