சனி, 15 ஏப்ரல், 2023

ஒரு வருடமாய் அப்பா இல்லை


அப்பா , 1977 இல் மலையகத்தில் இருந்து திடீரென்று வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்தார். அதற்கு இரு காரணங்கள் 
1, தமிழர்கள் மீது சிங்கள அரசின் பின்னணியில் செய்யப்பட்ட வன்முறையில் தமது மேலிடம் சக தமிழ் ஊழியர்களை காப்பாற்றவில்லை, அதனால் அவர்களோடு நேரிடையாக முரண்பட்டார்.
2, அப்பா அந்த தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணியோடு கூட்டாக இலங்கை தொழில் காங்கிரசில் போட்டியிட்ட சௌமீகமூர்த்தி தொண்டமானின் வெற்றிக்காக உழைத்தார், ஆனால் அவர் வென்றபின் அரசாங்கத்தோடு சேர்ந்துவிட்டார்.   
அப்பா வேலையை விட்டுவந்தபின்பும் எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டவில்லை. யாழ்ப்பாணத்தில் கண் பரிசோதித்து கண்ணாடி வழங்கும் கடையொன்றை திறக்கும் திட்டம் அப்பாவிடம்  இருந்தது , அவர் அந்த கற்கையை ஏற்கனவே நிறைவு செய்தவர், ஆனால் கடை திறக்கும் அளவு பணம் அப்பாவிடம் இருக்கவில்லை. அப்பா மாங்குளத்தில் இருந்த தோட்டத்திற்கு போனார். எட்டு ஏக்கரில் எள்ளு, உளுந்து, பயறு விதைத்தார். ஒரு முறையிலேயே தனது இரண்டு வருட உழைப்பு இலாபமாய் வந்ததாய் அப்பா சொன்னார்.அப்பாவிற்கு மீண்டும் முல்லைத்தீவு மருத்துவமனையில் வேலை கிடைத்தது.
அப்பா இல்லாமல் ஒரு வருடம் 
அப்பா--!  
Ye--s, How r u ?
ஒரு வருடமாய் அப்பா இல்லை