திங்கள், 11 செப்டம்பர், 2023

படைப்பாளி சு.ராஜசெல்வி

  சு.ராஜசெல்வியின்  படத்திற்கான கவிதைப்போட்டியில்சுமார் 280 கவிதைகள் ஈழநாதத்தில்  (வெள்ளிநாதம்  ) பிரசுரமாகியிருக்கிறது . அதில் 40  கவிதைகள் பரிசுக்குரியதாகவும் மிகுதி பாராட்டுக்குரிய கவிதைகளாகவும் பிரசுரமாகின.  சு.ராஜசெல்வி, ரா.சுஜந்தன் , எஸ் ஆர் எஸ் , சு.செல்வி, எஸ்.ஆர்.செல்வி, எஸ்.ராஜி ஆகிய பெயர்களில் இவர் எழுதியிருக்கிறார்.இவரது சிலகவிதைகள் வானொலியில் ஒலிபரப்பாயிருக்கிறது.நிகழ்வுகளிலும் கவிதை வாசித்திருக்கிறார்.

முகநூலுக்கூடான அகில உலக ரீதியான போட்டிகளில் கவிதைகளுக்காக, புகைப்படத்திற்காக, சிறுகதைகளுக்காக ஐம்பதிற்கும் மேற்பட்ட வெற்றியாளர் சான்றிதழ்கள் பெற்றிருக்கிறார்.  

இவரது முப்பது விஞ்ஞானக்கட்டுரைகள்  கிளிநொச்சியில் வெளியான "விழி " மருத்துவ இதழ்களில் பிரசுரமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர் எழுதிய "கைவிளக்கு" என்ற சிறுவர் நூல் 2010 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. 

கொரோனா காலத்தையொட்டி "ஜீவநதி" இதழ் அகில உலக ரீதியாக நடாத்திய கவிதை போட்டியில் தெரிவான கவிதைகளின் கவிதைத்தொகுதியிலும் இவரது கவிதை இடம்பெற்றிருக்கிறது. 

 " தடாகம்" அமைப்பு 2018  ஆம் ஆண் டு உலகம் தழுவிய ரீதியில் 2018  ஆம் ஆண்டு நடாத்திய கவிதைப்போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்று கவின்கலை பட்டத்தையும் பெற்றார். 

பாடசாலை வாத்திய அணியில் melodica வாத்தியத்தை வாசிப்பவராக இருந்திருக்கிறார்.1998 ஆம் ஆண்டு கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரியின் "வளர்பிறை" கையெழுத்துச் சஞ்சிகை வடகிழக்கு மாகாணத்தில் இரண்டாம் இடத்தை பெற்றது, இவர் அச்சஞ்சிகையின் ஆசிரிய ஆலோசகருக்கான சான்றிதழை பெற்றார்.

 svartsol12.blogspot.com  என்ற வலையிணையத்தில்  நோர்வேஜிய மொழியிலும் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.