செவ்வாய், 26 டிசம்பர், 2017


செவ்வாய், 5 டிசம்பர், 2017

மலரன்னை எழுதிய " நிமிர்வு " சிறுகதைக்கு முதல்பரிசு

 கருவி வளநிலையம் நடாத்திய  திறந்த இலக்கியப்போட்டியில் மலரன்னை அவர்கள் எழுதிய " நிமிர்வு " சிறுகதை முதல்பரிசு பெற்றுள்ளது. மலரன்னையின் பரிசுபெறும் 29 ஆக்கம் இது .


செவ்வாய், 21 நவம்பர், 2017

ஞாயிறு, 19 நவம்பர், 2017

எழுத்தாளர்மலரவனின் "ஹைக்கூ கவிதைகள்

எழுத்தாளர்மலரவனின் "ஹைக்கூ கவிதைகள்" நூலில் உள்ள கவிதைகள் "ஜீவநதி " ஹைக்கூ சிறப்பு இதழில் முழுமையாக மீள் பிரசுரமாகியுள்ளது. 

  

செவ்வாய், 14 நவம்பர், 2017

செவ்வாய், 24 அக்டோபர், 2017

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

சு.ராஜசெல்வி

படத்திற்கான கவிதைப்போட்டியில் சு.ராஜசெல்வியின்  சுமார் 280 கவிதைகள் ஈழநாதத்தில்  (வெள்ளிநாதம்  ) பிரசுரமாகியிருக்கிறது . அதில் 40  கவிதைகள் பரிசுக்குரியதாகவும் மிகுதி பாராட்டுக்குரிய கவிதைகளாகவும் பிரசுரமாகின.  சு.ராஜசெல்வி, ரா.சுஜந்தன் , எஸ் ஆர் எஸ் , சு.செல்வி, எஸ்.ஆர்.செல்வி, எஸ்.ராஜி ஆகிய பெயர்களில் இவர் எழுதியிருக்கிறார்.இவரது சிலகவிதைகள் வானொலியில் ஒலிபரப்பாயிருக்கிறது.நிகழ்வுகளிலும் கவிதை வாசித்திருக்கிறார்.
முகநூலுக்கூடான அகில உலக ரீதியான போட்டிகளில் கவிதைகளுக்காக, புகைப்படத்திற்காக, சிறுகதைகளுக்காக வெற்றியாளர் சான்றிதழ்கள்   பெற்றிருக்கிறார்.  
இவரது முப்பது விஞ்ஞானக்கட்டுரைகள்  கிளிநொச்சியில் வெளியான "விழி " மருத்துவ இதழ்களில் பிரசுரமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவர் எழுதிய "கைவிளக்கு" என்ற சிறுவர் நூல் 2010 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. 
கொரோனா காலத்தையொட்டி "ஜீவநதி" இதழ் அகில உலக ரீதியாக நடாத்திய கவிதை போட்டியில் தெரிவான கவிதைகளின் கவிதைத்தொகுதியிலும் இவரது கவிதை இடம்பெற்றிருக்கிறது. 
 " தடாகம்" அமைப்பு 2018  ஆம் ஆண் டு உலகம் தழுவிய ரீதியில் 2018  ஆம் ஆண்டு நடாத்திய கவிதைப்போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்று கவின்கலை பட்டத்தையும் பெற்றார். 
பாடசாலை வாத்திய அணியில் melodica வாத்தியத்தை வாசிப்பவராக இருந்திருக்கிறார்.1998 ஆம் ஆண்டு கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரியின் "வளர்பிறை" கையெழுத்துச் சஞ்சிகை வடகிழக்கு மாகாணத்தில் இரண்டாம் இடத்தை பெற்றது, இவர் அச்சஞ்சிகையின் ஆசிரிய ஆலோசகருக்கான சான்றிதழை பெற்றார்.
 svartsol12.blogspot.com  என்ற வலையிணையத்தில்  நோர்வேஜிய மொழியிலும் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.         

திங்கள், 25 செப்டம்பர், 2017

சு.ராஜசெல்வி


படத்திற்கான கவிதைப்போட்டியில் சு.ராஜசெல்வியின்  சுமார் 280 கவிதைகள் ஈழநாதத்தில் பிரசுரமாகியிருக்கிறது . அதில் 40  கவிதைகள் பரிசுக்குரியதாகவும் மிகுதி பாராட்டுக்குரிய கவிதைகளாகவும் பிரசுரமாகின.  இவரது சிலகவிதைகள் வானொலியில் ஒலிபரப்பாயிருக்கிறது. சு.ராஜசெல்வி, ரா.சுஜந்தன் , எஸ் ஆர் எஸ் , சு.செல்வி, எஸ்.ஆர்.செல்வி, எஸ்.ராஜி ஆகிய பெயர்களில் இவர் எழுதியிருக்கிறார்.
முகநூலுக்கூடான அகில உலக ரீதியான போட்டிகளில் கவிதைகளுக்காக, புகைப்படத்திற்காக, சிறுகதைக்காக வெற்றியாளர் சான்றிதழ் பெற்றிருக்கிறார்.  

வியாழன், 21 செப்டம்பர், 2017

சு.ராஜசெல்வி

படத்திற்கான கவிதைப்போட்டியில் சு.ராஜசெல்வியின்  சுமார் 280 கவிதைகள் ஈழநாதத்தில் பிரசுரமாகியிருக்கிறது . அதில் 40  கவிதைகள் பரிசுக்குரியதாகவும் மிகுதி பாராட்டுக்குரிய கவிதைகளாகவும் பிரசுரமாகின.  இவரது சிலகவிதைகள் வானொலியில் ஒலிபரப்பாயிருக்கிறது. சு.ராஜசெல்வி, ரா.சுஜந்தன் , எஸ் ஆர் எஸ் , சு.செல்வி, எஸ்.ஆர்.செல்வி, எஸ்.ராஜி ஆகிய பெயர்களில் இவர் எழுதியிருக்கிறார்.
முகநூலுக்கூடான அகில உலக ரீதியான போட்டிகளில் கவிதைகளுக்காக, புகைப்படத்திற்காக, சிறுகதைக்காக வெற்றியாளர் சான்றிதழ் பெற்றிருக்கிறார்.  

சு.ராஜசெல்வி

படத்திற்கான கவிதைப்போட்டியில் சு.ராஜசெல்வியின்  சுமார் 280 கவிதைகள் ஈழநாதத்தில் பிரசுரமாகியிருக்கிறது . அதில் 40  கவிதைகள் பரிசுக்குரியதாகவும் மிகுதி பாராட்டுக்குரிய கவிதைகளாகவும் பிரசுரமாகின.  இவரது சிலகவிதைகள் வானொலியில் ஒலிபரப்பாயிருக்கிறது. சு.ராஜசெல்வி, ரா.சுஜந்தன் , எஸ் ஆர் எஸ் , சு.செல்வி, எஸ்.ஆர்.செல்வி, எஸ்.ராஜி ஆகிய பெயர்களில் இவர் எழுதியிருக்கிறார்.
முகநூலுக்கூடான அகில உலக ரீதியான போட்டிகளில் கவிதைகளுக்காக, புகைப்படத்திற்காக, சிறுகதைக்காக வெற்றியாளர் சான்றிதழ் பெற்றிருக்கிறார்.  

புதன், 20 செப்டம்பர், 2017

சு.ராஜசெல்வி

படத்திற்கான கவிதைப்போட்டியில் சு.ராஜசெல்வியின்  சுமார் 280 கவிதைகள் ஈழநாதத்தில் பிரசுரமாகியிருக்கிறது . அதில் 40  கவிதைகள் பரிசுக்குரியதாகவும் மிகுதி பாராட்டுக்குரிய கவிதைகளாகவும் பிரசுரமாகின.  இவரது சிலகவிதைகள் வானொலியில் ஒலிபரப்பாயிருக்கிறது. சு.ராஜசெல்வி, ரா.சுஜந்தன் , எஸ் ஆர் எஸ் , சு.செல்வி, எஸ்.ஆர்.செல்வி, எஸ்.ராஜி ஆகிய பெயர்களில் இவர் எழுதியிருக்கிறார்.
முகநூலுக்கூடான அகில உலக ரீதியான போட்டிகளில் கவிதைகளுக்காக, புகைப்படத்திற்காக, சிறுகதைக்காக வெற்றியாளர் சான்றிதழ் பெற்றிருக்கிறார்.  

வியாழன், 14 செப்டம்பர், 2017

செவ்வாய், 12 செப்டம்பர், 2017

திங்கள், 11 செப்டம்பர், 2017

சனி, 9 செப்டம்பர், 2017

சு.ராஜசெல்வி

படத்திற்கான கவிதைப்போட்டியில் சு.ராஜசெல்வியின்  சுமார் 280 கவிதைகள் ஈழநாதத்தில் பிரசுரமாகியிருக்கிறது . அதில் 40  கவிதைகள் பரிசுக்குரியதாகவும் மிகுதி பாராட்டுக்குரிய கவிதைகளாகவும் பிரசுரமாகின.  இவரது சிலகவிதைகள் வானொலியில் ஒலிபரப்பாயிருக்கிறது. சு.ராஜசெல்வி, ரா.சுஜந்தன் , எஸ் ஆர் எஸ் , சு.செல்வி, எஸ்.ஆர்.செல்வி, எஸ்.ராஜி ஆகிய பெயர்களில் இவர் எழுதியிருக்கிறார். முகநூலுக்கூடான அகில உலக ரீதியான போட்டிகளில் கவிதைகளுக்காக, புகைப்படத்திற்காக, சிறுகதைக்காக வெற்றியாளர் சான்றிதழ்கள்   பெற்றிருக்கிறார்.

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017


திங்கள், 27 பிப்ரவரி, 2017

மதிப்புக்குரிய எழுத்தாளர் " மலரன்னை" அவர்கள் இன்று (26 /02 /2017 ) "கலைமாமணி " விருது பெற்றார்



மலரன்னையின் " மறையாத சூரியன்" நாவலும்,   " கீறல்"  சிறுகதைத்தொகுதியும் 4/ 3/ 2017 அன்று (கோப்பாய் பிரதேசத்தில்  ) வெளியிடப்பட்டது. மலரன்னையின் சுமார் 150 சிறுகதைகள் இதுவரை பிரசுரமாகியுள்ளன.  நாற்பதிற்கும் அதிக வானொலிநாடகங்கள் ஒலிபரப்பாகியுள்ளதுடன் ," கனவுகள் நனவாகும் " என்ற 43 அங்கங்களையுடைய தொடர்நாடகமும்  பலத்த வரவேற்புடன் ஒலிபரப்பாகியது குறிப்பிடத்தக்கது. இவற்றையையும்விட இவர் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட  ஆக்கங்கள் தாயக வானொலியில் நிகழ்ச்சிகளாக ஒலிபரப்பாகியிருக்கின்றன குறிப்பாக பல மாவீரர் நிகழ்ச்சிகளை தத்ரூபமாக எழுதியிருக்கிறார். இவரது பத்து ஆங்கிலக்கவிதைகள் " Hot spring " பத்திரிகையில் பிரசுரமாகியது. இவரது ஆக்கங்கள் (சிறுகதைகள் , நாடக எழுத்துருக்கள் , நாவல்) இதுவரை 32 தடவைகள் திறந்த இலக்கியப்போட்டிகளில் பரிசுபெற்றிருக்கின்றன.  

 மலரன்னை அவர்கள் இலங்கை வானொலி சிறுவர் நிகழ்ச்சிகளில் 1950 களில் தனது இளைய சகோதரி அமரர் மங்களேஸ்வரி அவர்களுடன் இணைந்து பங்குபற்றியிருக்கிறார். இவரது ஒரு கட்டுரை "கோட்டையில் ராணி" என்ற புனைப்பெயரில் 1960 /1961 ஆண்டில் விவேகி இதழில் பிரசுரமானது, இதுவே இவரது முதலாவது பிரசுரமான ஆக்கம் ஆகும். நீண்ட இடைவேளைக்குப்பின் இவரது முதலாவது சிறுகதை 1993 ஆம் ஆண்டு ஈழநாதம் பத்திரிகையில் பிரசுரமாகியது.   

மலரன்னை , அறியப்பட்ட எழுத்தாளர், இவர் தனது ஆரம்பக்கல்வியை (முதலாம் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டுவரை) மலையகப்பாடசாலையொன்றில் கற்றார் , இவரது பாடசாலை ஆசிரியையாக இவரது தாயாரே இருந்தார். பாடசாலையின் பொறுப்பாசிரியராக இவரது தந்தையாரே இருந்தார். ஆறாம் வகுப்புக்கல்வியை சண்டிலிப்பாய் இந்து மகாவித்தியாலயத்திலும் பின் ஏழாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை மானிப்பாய் இந்துக்கல்லூரியிலும்  உயர்தரக்கல்வியை விஞ்ஞானப்பிரிவில் யாழ் இந்து மகளீர் கல்லூரியிலும் கற்றார். தேசிய ஹோமியோபதி கல்விநிறுவனத்தில் ஹோமியோபதி மருத்துவ பட்டயக்கல்வியை பூர்த்தி செய்தார். தனது கணவருடன் இணைந்து முல்லைத்தீவு தண்ணீரூற்றில் இயங்கிய நாகபூசணி மருத்துவநிலையத்தில் (தனியார்) மருத்துவராக பணியாற்றினார்.  பிற்காலங்களில் ஹோமியோபதி, சுதேச மருத்துவத்திற்காக பிரித்தானியாவில் இயங்கும் மாற்று மருத்துவத்திற்கான அமைப்பு ஒன்றில்  அங்கத்தவராக இருந்தார்.